ரூ.100 கோடியில் திருவாரூரில் கொண்டுவரப்பட்ட மத்தியப் பல்கலைக்கழகம் இங்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களில் மகுடம். இதேபோல, பிறந்த ஊரான திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, அருகிலுள்ள திருத்துறைப்பூண்டியில் மத்திய பல் தொழில்நுட்பக் கல்லூரி அமையவும் வழிவகுத்தார். அரசியல்வாதிகள் ஆரம்ப காலத்தில் போட்டியிடுவதற்குச் சொந்த ஊரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். கருணாநிதியோ, பிற்காலத்தில் திருவாரூரைத் தேர்ந்தெடுத்தார்.