போரின்போது இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எனக்கும் மாறி மாறி அவர் உருக்கமாகப் பேசிக்கொண்டே இருந்தார். ஒருமுறை நேரில் சந்தித்தபோது ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘அப்பாவி உயிர்களையாவது காப்பாற்றுங்கள். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு உறுதி கொடுக்க வேண்டும். நம்முடைய நட்புக்காகவேனும் நீங்கள் எனக்காக இதைச் செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் நீங்கள் இலங்கை அரசிடம் எனக்காகப் பேச வேண்டும்’ என்றார். நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். நிச்சயமாக நான் என்னால் முடிந்தவரை எல்லா நடவடிக்கைகளையும்
...more