ஆரம்ப சுகாதாரத்தைப் பொறுத்தவரை இந்திய அளவில் தமிழகமே முன்னணியில் இருக்கிறது. 1970-களில் கிட்டத்தட்ட 300 ஆக இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை இன்று 1,400-ஐத் தொட்டுவிட்டது. துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 8,700-க்கும் அதிகம். மற்ற மாநிலங்கள் இவ்வளவு வேகமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தியதில்லை. அதுமட்டுமல்ல, ஹெச்ஐவி, மலேரியா, தொழுநோய் போன்ற கடும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழகம் முழுத் திறனோடு செயல்பட்டுள்ளது. இதைவிட முக்கியமானது, தமிழகத்தில் மட்டும்தான் பொதுநலச் சுகாதாரத் துறை என்ற அமைப்பு இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவத் துறை மட்டும்தான்.
...more