ஒரு ஆட்சியாளராக யாருடைய காலகட்டம் உங்களுக்குச் சவாலானதாக இருக்கும்? எந்த அதிகாரியைக் கேட்டாலும் கருணாநிதியைத்தான் சொல்வார். எந்த நேரம் அழைப்பார், எதுகுறித்து விசாரிப்பார் என்று யூகிக்கவே முடியாது. காலை 5 மணிக்கு போன் அடித்து, “ஏங்க, ‘தீக்கதிர்’ பத்திரிகையில இப்படி ஒண்ணு வந்துருக்கே, உண்மையா?” என்பார். சின்ன பத்திரிகைகள், கட்சிப் பத்திரிகைகளைக்கூட உதாசீனப்படுத்த மாட்டார். திடீரென்று, “சில்லறைக் கடைகளில் என்ன விலை விற்கிறார்கள் என்பது முதற்கொண்டு தமிழ்நாடு முழுக்க பருப்பு, தக்காளி விலை வேண்டும்” என்பார். எந்த விஷயத்திலும் அவர் கையில் ஒரு தரவுகள் பட்டியல் இருக்கும். நாம் கொடுப்பதோடு அதை
...more