காங்கிரஸ் முன்னெடுத்த தேசியவாதம், மொழி உரிமைகளையும் இதர அடையாளம்சார் அரசியலையும் நாட்டை ஒன்றுபடுத்துவதிலிருந்து கவனத்தைச் சிதறவைக்கும் அம்சங்களாகக் கருதியது; இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையானது முதலில் திக, பிறகு திமுக மீதான இத்தகைய ஒதுக்குதலுக்குப் பின்னிருந்தது. 2. இந்திய இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள், ‘சாதியல்ல - வர்க்கம்தான் பிரச்சினை’ என்று கருதினர். சாதி காரணமாகவே மக்களில் பெரும்பாலானோர் அவமானத்துக்கு உள்ளானதைக் கருத்தில் கொள்ள இடதுசாரிகள் தவறினர்.