மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு முறை இருந்தபோது, தேர்வான 90% மாணவர்கள் நகர்ப்புற, உயர் வர்க்க மாணவர்களாக இருந்தார்கள். கோச்சிங் கிளாஸ் பயிற்சியே இதன் பின்னிருந்தது. நுழைவுத் தேர்வை நீக்கியபோது, நிலைமை மாறியது. உயர் கல்வியிலும் வேகமாக மேலே வந்தோம். பிற்பாடுதான் தேங்கிவிட்டோம்.