ஆவியூர் சீனிவாச கிருஷ்ணமாச்சாரி எனும் தன் பெயரை ஏ.எஸ்.கே. என்று மாற்றிக்கொண்டவர். இவருடைய ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார்’ நூல் இந்திய தத்துவ ஞான மரபில் பெரியாரின் இடம் எப்படி மறுதலிக்க முடியாது என்பதை விளக்கக் கூடியது. ஏ.எஸ்.கே.வின் குடும்பத்தினரும் முற்போக்காளர்கள். அண்ணன்கள் துரைசாமி சாதி கடந்த மணமும், பார்த்தசாரதி மதம் கடந்த மணமும் செய்துகொண்டனர். ஏ.எஸ்.கே. மணம் செய்துகொள்ளவில்லை!