நவீன சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்ட பிராமணரல்லாதோர் இயக்கம் அல்லது திராவிட இயக்கம் என்பது, அதிகாரப் பகிர்வையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதாக அமைந்ததே அன்றி, சமூகத்தில் வேற்றுமையை வளர்ப்பதாகவோ, முரண்களை வன்செயல்களாகக் கூர்மைப்படுத்துவதாகவோ இருக்கவில்லை. ஒதுங்குவது, ஒதுக்குவது போன்றவற்றைப் பிராமணர்கள் செய்தாலும், பிறர் அப்படி தமிழ்நாட்டில் பிராமணர்களை நடத்தியதில்லை. இன்னும் சொல்லப்போனால், பிராமணர்கள் பலருடனும் முரணும், அதேசமயம் உரையாடலும், உறவும் கொண்டதாகத்தான் திராவிட இயக்கமே விளங்கியது. இந்த இடத்தில் ஜெயலலிதாவையும்
...more