தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வளம் பத்தாது. நிலத்தடித் தண்ணீரும் ஆழ்துளைக் கிணத்துப் பாசனமும்தான் நமக்குள்ள ஒரே வழி. அதைப் புரிஞ்சுதான் விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம்னு கொண்டுவந்தார்! ஆறு, குளங்களை அரசாங்கம் அப்பப்போ தூர் வார்றதுங்கிறதை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். கூடவே, தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனத் திட்டங்களையெல்லாம் கொண்டுவந்தார். விவசாயி விளைவிக்கிற நெல்லைத் தனியார் வியாபாரிங்க கொறைச்ச விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடிக்கிறதுக்கு முடிவு கட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கொண்டுவந்தார். காய்கறி, பழங்களை விற்க உழவர் சந்தைகளைக் கொண்டுவந்தார். ரெண்டு முறை
...more