1972 அக்டோபர் 18-ல் அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். “கருணாநிதி பதவி விலக வேண்டும்” என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினார். டெல்லி வரை சென்று ஊழல் புகார்களைக் கொடுத்தார். 1973-ல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சாதனை புரிந்தார். மறுபுறம் முதல்வர் கருணாநிதி ராஜராஜசோழனுக்குச் சிலை, பூம்புகார் கலைக்கூடம், கட்டபொம்மனுக்குக் கோட்டை, பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழலைத் தடுப்பதற்கான மசோதா, மாநில சுயாட்சித் தீர்மானம், கச்சத்தீவுத் தீர்மானம் என்று அயராமல் இயங்கிக்கொண்டிருந்தார்.