ஆங்கிலேயரிடம் தொடங்கி திராவிட நாடு கேட்டுவந்தது திராவிட இயக்கம். “இனி, இந்திய ஒன்றியத்தில் பிரிவினைக் கோரிக்கைகளை அனுமதியோம்” என்று நேரு அரசு எப்போது பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம் மூலமாகத் தமிழர்களின் அரசியல் குரலான திமுகவை முடக்க முற்பட்டதோ அப்போது பிரிவினை முழக்கத்தைக் கைவிட்டது அது.