பாரதி ராஜா

39%
Flag icon
பெரியார் எங்காவது கருப்பசாமியையும் சுடலைமாடனையும் உடைத்தாரா? கரைக்கும் பொம்மைப் பிள்ளையாரைத்தான் உடைத்தார். ஏனென்றால், அது வட நாட்டு வரவு. அதற்குப் பின் அதிகார அரசியல் இருக்கிறது. அதிகார ஆன்மிகத்தையே அவர் எதிர்த்தார். அவருடைய பிரதான எதிரி சாதி; கடவுள் அல்ல. உண்மையான ஆன்மிகத்துக்கான வழியை மூவாயிரம் ஆண்டு பழமையான நம்முடைய நாட்டார் வழக்காறு கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல் சுரண்டல் கலாச்சாரத்துக்கு எதிரான வாழ்வியல் வழிமுறையும் நாட்டார் வழக்காற்றின் வேர்களில்தான் இருக்கிறது. அதை நோக்கிய கவனமும் இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது.