மிகச் சிறந்த சுதந்திரத்தை எனக்கு அவர் அளித்தார். கல்வியாளர்களுக்குப் பெரிய மதிப்பளிப்பவர். “அனந்த கிருஷ்ணன் என்னைச் சந்திக்க வந்தால், இரண்டு நிமிடங்களுக்கு மேல் அவர் காத்திருக்கும் சூழல் இல்லாதபடி அவருக்கான நேரத்தை ஒதுக்குங்கள்” என்று அவர் சொல்லியிருந்ததை அதிகாரிகள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். நான் அவரைச் சந்திக்கச் சென்றால், எழுந்து நின்று இரு கைகூப்பி வரவேற்பார். என்னை அமரச் சொல்லிவிட்டு பிறகு அவர் அமர்வார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல துணிச்சலான முடிவுகளை நான் எடுக்க வேண்டியிருந்தது. நிறைய எதிர்ப்புகளையும் தாண்டி சீர்திருத்தங்களுக்குத் துணை நின்றார். தகவல் தொழில்நுட்பத் துறை புரட்சியை
...more