1960-களின் தொடக்கத்தில் கருணாநிதி மற்றும் திமுக மீது பிரதான பத்திரிகைகளின் அணுகுமுறை மாறியது. தங்களுடைய பத்திரிகைக்காக கருணாநிதி தொடர் எழுத வேண்டும் என்று அவை விரும்பின. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற அவருடைய சுயசரிதம் முதலில் ‘குமுதம்’ இதழில் தொடராக வெளிவந்தது. அவருடைய அரசை ‘குமுதம்’ விமர்சிக்கத் தொடங்கியதும் அடுத்து ‘தினமணி கதிர்’ இதழில் எழுதினார். நெருக்கடி நிலை அமலுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியிடம் திமுக தோற்ற பிறகு, பிரதான பத்திரிகையுலகிலும் நுழைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு ‘குங்குமம்’ வார இதழைத் தொடங்கினார். ஊடகத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றம்
...more