கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் விவசாயிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை நான் வழங்குவேன். ஒவ்வொரு முறை சட்ட மன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் என் பெயரைக் குறிப்பிட்டு, நான் என்னென்ன பரிந்துரைகளை அளித்தேன்; அவற்றில் எவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன; அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் அறிவிப்பார். விவசாயிகள்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். விவசாய வளர்ச்சிக்கான குரல்கள் எங்கிருந்து வந்தாலும் அவர் காது கொடுப்பார். அவர் செம்மொழி மாநாட்டின்போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து கருப்பொருட்களைக் கொண்டு ஒரு
...more