More on this book
Kindle Notes & Highlights
(அன்னெமர்- மராமத்து காண்ட்ராக்டர்; உப்பாஸ். காவலாள்; கம்பொங்-கிராமம்; கந்தோர்-அலுவலகம், கித்தா-ரப்பர்; லிங்-தமிழன்; கிராணி-குமாஸ்தா; சாடோ-குதிரை வண்டி; சாக்கே-ஜப்பானிய மது, ஷம்சு-சாராயம்; தவ்க்கே-முதலாளி; துவான்-ஐயா; மாட்ஸ்கப்பை-கம்பெனி; மெர்டேக்கா-விடுதலை; பெந்தெங்-கோட்டை.)
’வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு’
வறுமை, தீண்டாமை காரணமாகத் தமிழகத்தில் வாழ்வதைவிட வேறு நாடுகளுக்குச் சென்று வளமாக வாழலாம் என்று நம்பிய உடலுழைப்பாளர்கள் கூட்டமாகக் கப்பலேறினர்.
மலேசியா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகள், பால் சமத்துவமின்மை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினர்.
தமிழகத்திலிருந்து மலேயாவிற்குப் புலம்பெயர்ந்து போன தமிழர்கள் ஐ.என்.ஏ.வில் சேர்ந்ததும், கெரில்லாப் போரில் பங்கேற்றுப் போராடியதும் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள்.
“தில்லைமுத்து! நீ தமிழகத்தை நேரில் கண்டதில்லை. கவிதைகளில் பார்த்தவன். கவிதை என்பதில் கற்பனை என்ற பொருள் மறைந்திருக்கிறது.
“பழம்பாடல்களில் விதந்தோதப்படும் தமிழ் வீரமெல்லாம் பெரும்பாலும் சில்லறைச் சச்சரவுகளைப் பற்றியவையே.
காளையார்கோயில் வேங்கைமார்பனைப் பாண்டியன் வென்றதில் என்ன பெருமை இருக்கிறது? இருவரும் தமிழர்கள். ஓர் அரசன், சின்னஞ்சிறு கிராமத் தலைவன் ஒருவனை வீழ்த்தி, அவனுடைய சொத்து சுதந்திரங்களைப் பறித்துக்கொண்டான்.
“டில்லிப் பட்டாணியர் தமிழகத்தில் புகுந்து சூறையாடியபோது இலக்கியப் புகழ்பெற்ற தமிழ் வீரர்கள் எங்கெங்கே எதிர்த்துப் போராடினார்கள்? எத்தனைபேர் உயிர்ப்பலி கொடுத்தார்கள்? எங்கும் இல்லை, எவருமில்லை.
மாலிக்காபூரின் குதிரைப்படை வெகு தொலைவில் வரும்போதே, ‘வடதிசைக் கங்கையும் இமயமும்கொண்டு தென்திசையாண்ட தென்னவன்’ ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் நேரியமங்கலம் மலைக்காட்டில் ஒளிந்துகொண்டான்.”
விஜயநகர வடுகர்சேனை வந்தபோது நடந்ததென்ன? தமிழர்களின் உதவியோடு பாண்டியனின் அரசு வீழ்த்தப்பட்டது. விஜயநகரத்தானுக்குத் தமிழ்க் கூலிப்படைகளை அமர்த்திக் கொடுத்து-பாண்டியனின் படைகளையே கைமாறச் செய்த தரகன் யார்? அரியநாதன் - தமிழன்.”
பூம்புகாரில் மாவன்னாக் கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார் பற்றி தங்களுக்குத் தெரிந்திருக்குமே!
பணம் இருந்தால் அதுக்குத் தக்கனையாகத் தன்மை வேணும்; வீரம் வேணும்; ஏழை எளியதுகளுக்கு உதவுறாப்புல நாலு காரியம் பண்ணி நல்ல பேர் வாங்கணும்.
முடிசார்ந்த மன்னரும் முடிவிலொரு பிடிச் சாம்பல்னு

![புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1663566112l/39088037._SY475_.jpg)