இரவு நீங்கள் கண்டீர்களே! அதுதான் உலகம். அதுதான் உண்மையான உலகம்... பகல் வெறும் கனவு! நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தினசரி வரும் கனவு! கனவைப் பொறுமையோடு போக விடுங்கள்! மாலை வரட்டும்... ஆகா! மாலை வரட்டும்... மீண்டும் தென்றல் வரும்... வரும்... வரும்... தடையில்லாமல் வந்துகொண்டேயிருக்கும்.