ஒரு நாளல்ல... ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல அந்தப் படத்தை அவன் பார்த்தான். ‘அம்பிகா தியேட்ட’ரின் சுவையான காப்பியும், ‘அபிமன்யு’வில் கண்ட கருணாநிதியின் கை வண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன. “காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் ‘காதலே’பிறந்துவிட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது...!