உண்மையில் பார்க்கப் போனால், இந்திய இனங்கள் தமக்குள் இரத்தத்தாலும், கலாச்சாரத்தாலும் இரண்டறக் கலந்ததற்கு நெடுங்காலத்திற்குப் பின்னர் தான் சாதிமுறை நடைமுறைக்கு வந்தது. சாதி பாகுபாடு என்பது உண்மையில் இனப் பாகுபாடே என்பதும், பல்வேறு சாதிகளும் வெவ்வேறான இனங்களே என்பதும் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகும். பஞ்சாபிலுள்ள பிராமணனுக்கும், சென்னையிலுள்ள பிராமணனுக்கும் இடையில் இன வழியில் என்ன ஒற்றுமை உள்ளது? வங்கத்திலுள்ள தீண்டாதானுக்கும், சென்னையிலுள்ள தீண்டாதானுக்கும் இடையில் இனவழியில் என்ன ஒற்றுமை உள்ளது? பஞ்சாப் பிராமணனுக்கும் சென்னை தீண்டாதானுக்கும் இடையே என்ன இனவழியிலான வேறுபாடு உள்ளது. சென்னை
...more

