பலவகைச் சாதிகளைச் சேர்ந்த இந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஒருவரைப் போலவே இன்னொரு சாதியினர் ஒன்று கலவாமால் கொண்டாடுவதால் சாதிகள் ஒரே சமூகமாக இணைந்து விடுவதில்லை. அவ்வாறு இணைய வேண்டுமானால் மக்கள் பொதுவான நடவடிக்கைகளில் பங்குபெறுவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம். காரணம் ஒன்றிணைந்து செயல்படுவதால் அவர்களிடையே எழும் உணர்வுகள் ஒன்றாகின்றன. கூட்டு நடவடிக்கைகளில் தனிமனிதன் பங்குபெறவும் பகிர்ந்துகொள்ளவும் நேரும் போதுதான் அந்தக்கூட்டுநடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியைத் தன் தோல்வியாகவும் அவன் உணருவான். இந்த உணர்வே மக்களை ஒருங்கிணைத்து, ஒரே சமூகமாக
...more

