பாரதி ராஜா

42%
Flag icon
மராத்தியத்தை ஆண்ட பேஷ்வாக்களின் ஆட்சியில் தெருவில் எதிரே வரும் இந்துக்களின் மீது தீண்டாதாரின் நிழல் பட்டால் கூட தீட்டாகி விடும் எனக் காரணம் காட்டித் தீண்டாதாரை வீதிகளில் நடக்க அனுமதித்ததில்லை. இந்துக்கள் தவறித் தீண்டாதாரைத் தொட்டு அவர்கள் தீட்டாகி விடுவதைத் தவிர்ப்பதற்குத் தீண்டாதார் தம் கழுத்திலோ, மணிக்கட்டிலோ கறுப்புக் கயிறு ஒன்றினை அடையாளமாகக் கட்டிக் கொள்ள வேண்டுமெனக் கட்டளை இடப்பட்டிருந்தது. பேஷ்வாக்களின் தலைநகரான புனேயில் தீண்டாதான் தெருவில் நடந்தால் எழும்பும் புழுதி பட்டு எதிரே வரும் இந்து தீட்டாகி விடாமல் தடுப்பதற்காக, தீண்டாதான் தன் இடுப்பில் விளக்குமாறு ஒன்றினைக் கட்டிக் கொண்டு தான் ...more
இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2) (Tamil Edition)
Rate this book
Clear rating