இந்திய நாட்டில் பெரும் பணக்காரர்கள் கையில் ஒரு காசு கூட இல்லாத சாதுக்களுக்கும் பக்கரிகளுக்கும் அடிபணிந்து நிற்பதற்குக் காரணம் என்ன? ஏழை, எளிய இந்திய மக்கள் தங்களிடமுள்ள அற்பச் சொத்தான மூக்குத்தி, தோடு முதலியவற்றை விற்றுக் காசிக்கும், மெக்காவுக்கும் புனிதயாத்திரை போவதேன்? இந்தியாவில் ஒரு நீதிபதியைவிடப் புரோகிதன், சாதாரண மக்களிடம் செல்வாக்கு பெற்றவன் அல்லவா?

