“நம்முடைய சமுதாய அமைப்பைச் சீர்திருத்தம் செய்யாமல் அரசியல் சீர்திருத்தத்திற்கு நாம் தகுதியுடையவர்களல்ல என்போர் கூற்றினை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். சமுதாயச் சீர்திருத்தத்திற்கும் அரசியல் சீர்திருத்தத்திற்கும் என்ன தொடர்புள்ளது என்பது எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய விதவைகள் மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பதனாலும், நம்முடைய பெண்களுக்கு மற்ற நாட்டுப்பெண்களை விட இளமையிலேயே திருமணத்தை நடத்தி விடுவதாலும், நாம் நம் நண்பர்களைக் காணச் செல்லும்போது நம் மனைவியரையும் மகளிரையும் நம்முடன் அழைத்துச் செல்லாததாலும் அல்லது ஆக்ஸ்போர்டுக்கோ கேம்பிரிட்ஜ்க்கோ நம் பெண்களைப் படிப்பதற்கு அனுப்பாததாலும் நாம்
...more

