ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும்; அந்த அன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள்கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள் இடத்திலும், மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல்தானே ஒழிய, வேறில்லையென்றும்; அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கை யிலிருந்து, யோக்கியதையிலிருந்து, மனப்பான்மையிலிருந்து, தேவை யிலிருந்து, ஆசையிலிருந்து உண்டாவதென்றும்; அவ்வறிவும், நடவடிக்கையும், யோக்கியதையும், மனப்பான்மையும், தேவையும், ஆசையும் மாறக்கூடியதென்றும்; அப்படி மாறும்போது அன்பும், நட்பும் மாறவேண்டிய தான் என்றும் - மாறக்கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே,

