இன்று பெரும்பான்மை மக்கள் ‘காதலின் - காதலியாக’ வாழ்வதன் தன்மையெல்லாம் வேறு ஒருவர் ஜோடி பார்த்துச் சேர்த்ததும், பிள்ளைகளைப் பெறுவதற்கென்றும், வீட்டு வாழ்க்கையின் உதவிக்கென்றும், இயற்கை உணர்ச்சிக்கும், பரிகாரத்திற்கென்றும் சேர்க்கப்படுகின்ற ஜோடிகளாகத்தான் இருந்து வருகிறதே தவிர, தாங்களாகத் தங்கள் காதல் மிகுதியால், காதல் தெய்வத்தால் கூட்டுவித்ததைக் காணுவது அருமையாக இருக்கிறது.

