பொதுவாக ஒரு மனிதனுக்கு தன் முதல் மனைவி (1) செத்துப்போன காலத்திலும் (2) மற்றொரு கணவனிடம் ஆசை கொண்டு வெளிப்பட்டுவிட்ட காலத்திலும் மறுமணம் செய்துகொள்வதை யாரும் குற்றம் சொல்வதில்லை. அதுபோலவே, (3) தீராத கொடிய வியாதிக் காரியாயிருக்கும் காலத்திலும் மறுமணம் செய்துகொள்வதை யாரும் ஆட்சேபணை செய்வதில்லை. (4) பைத்தியக்காரியாய்ப் புத்தி சுவாதீன மில்லாமற் போய்விட்ட காலத்திலும் யாரும் ஆட்சேபணை செய்வதில்லை.

