இவைகள் அதற்காகக் கூறியதல்ல என்பது நமது அபிப்பிராயம். அதாவது முதற் குறளுக்கு ‘‘காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை; பெண்கள் தாங்களாகவே கற்பாயிருக்கவேண்டும்’’ என்பதுதான் கருத்தாக இருக்கலாம் என்று கருதுகிறோம். இரண்டாவது குறள், விலைமாதரைப் புணர்கின்றவர்க்குக் கூறிய பழிப்புரையேயல்லாமல் காதல் கொண்ட மற்றப் பெண்களைக் கூடித்திரியும் ஆண்களைக் குறித்துக் கூறியதல்லவென்பது நமதபிப்பிராயம்.

