ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் - துறவிகளாய் விட்டார்களானால், இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரையொருவர் பிரிவதும், வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமாகுமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோதமில்லையானால் ஒருவர் ஞானியாகித் துறவியாகிவிட்டதால், மற்றவரை விட்டுப் பிரிந்து செல்வது காதலுக்கு விரோதமாகுமா?

