சில சமயங்களில் ஒரு பெண்சாதியின் நடவடிக்கையில் சந்தேகத்திற்காகப் பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கின்றோம். தெய்வீக சம்பந்தமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன்? என்பதைப்பற்றித் தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் - அவர்களுக்கும் மனிதத் தன்மையும், மனித உரிமையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டுமானால் - ஆண்களுக்குத் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும் ஒழுக்கமும் ஏற்படவேண்டுமானால், கல்யாண ரத்திற்கு இடம் அளிக்கப்படவேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படி இல்லாதவரை ஆண் - பெண் இருவருக்கும் உண்மை இன்பத்திற்கும் சுதந்திர வாழ்க்கைக்கும்
...more

