உலகில் பொருளியல் சமத்துவம் ஏற்படுகின்றவரை திருட்டு என்னும் குணமானது குற்றமாகத்தான் பாவிக்கப்படும். உலகிலுள்ள எல்லாச் சொத்தும் உலகத்திலுள்ள எல்லோருக்கும் சொந்தம்; ஒவ்வொருவனும் பாடுபட்டுத்தான் சாப்பிடவேண்டும்; தேவைக்குமேல் எவனும் வைத்துக் கொள்ளக்கூடாது - போன்ற கொள்கைகள் ஏற்பட்டுவிட்டால், திருட்டுப் போவதும், திருட்டுப் போனதைப்பற்றிக் கவலைப்படுவதும் தானாகவே மறைந்துவிடும். ஆனால், இப்போது நான் திருடுவது குற்றமல்ல, நீ பொய் சொல்வதுதான் குற்றம்; நான் விபச்சாரம் செய்வது குற்றமல்ல, நீ விபச்சாரம் செய்வது குற்றமல்ல, நீ விபச்சாரம் செய்வதுதான் குற்றம் என்பது போன்றதான ‘‘பொது ஒழுக்கங்கள்’ என்பவைகளும் ‘‘பொதுக்
...more

