இந்து மதத்தில் இந்துக் கடவுள்களே பல மணங்கள் செய்துகொண்ட தாகவும் மற்றும் பல வைப்பாட்டிகள் வைத்திருப்பதாகவும் மத ஆதாரங்களில் காணப்படுவதுடன் அந்தக் கடவுள்களை அந்தப்படியே அதாவது பல மனைவிகள், வைப்பாட்டிகள் ஆகியவைகளுடன் தமிழர்கள் - இந்துக்கள் என்பவர்கள் பூசை, கல்யாண உற்சவம் முதலியவைகள் செய்தும் வணங்குகிறார்கள். இஸ்லாமிய மதத்திலும் நாயகம் முகமதுநபி அவர்களே ஏககாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் இருந்ததாக ஒப்புக்கொள்ளப்படுகின்றது.

