இன்றைய தினம் காதலைப்பற்றிப் பேசுகிறவர்கள், ‘‘காதெலன்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல’’ என்றும், ‘‘அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு. காதல் வேறு’’ என்றும், ‘‘அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்’’ என்றும், அதுவும் ‘‘இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்’’ என்றும், ‘‘அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை’’ என்றும், ‘‘அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்’’ என்றும், அந்தப்படி ‘‘ஒருவரிடம் ஒருவருக்குமாக - இருவருக்கும் ஒரு காலத்தில் காதல்
...more

