மிக நுணுக்கமாக நுழைந்து சாதி பார்ப்பதும், ஆள் அம்பு பார்த்து அன்பு வைப்பதும், எளியவர்களிடம் அரசியல் செய்வதும், அடுத்தவன் உழைப்பில் தனக்கான நாற்காலியைத் தயாரித்துக் கொள்வதும், விருப்பமில்லா இதயத்தை எடுத்துக்கொள்வதும், சிரிக்கச் சிரிக்க வதந்தியும் சீரியஸுமாகப் பொரளி சொல்வதும்... எல்லாம் எவ்வளவு பெரிய கெட்ட பழக்கங்கள்? புகை, குடி மாதிரி மனதின் எல்லா அழுக்குகளையும் தூக்கி தூர வீசி விடுகிற ஒரு தருணம் ஆயுசுக்குள் வந்துவிடுமா?