'இதிலென்னாயா இருக்குது? சாமிக்கு வேண்டி வெட்டித் திங்கறமே. அப்பிடி நெனச்சுக்க' என்றார்கள். 'சாமி உசுர உறிஞ்சிக்கிட்டுச் சக்கய நமக்குத் தருவாரு. இதுல ஒவ்வொரு சதையிலயும் உசுரோடிக்கிட்டு இருக்குமே. எப்பிடியாயா திங்க நாக்கும் மனசும் வரும்?' என்று கேட்டாள் கிழவி. அது சரிதான் என்று ஆமோதித்தார்கள்.