பனங்காயின் மூன்று கண்களுக்கும் நடுவே நீண்டு வளைந்த கம்பைச் சொருகி பனங்காய் வண்டி விளையாட்டு. தூரத்தில் கானல் நீரில் நீந்திக்கொண்டு இருந்த ஒரு மரத்தை இலக்காக்கி, யார் அதை முதலில் தொடுவது என்கிற பந்தயம் நடந்துகொண்டு இருந்தது. நெருஞ்சி முட்காட்டில் பனங்காய் வண்டியை உருட்டியபடி அந்தச் சிறுவர்கள் மரத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தார்கள். இத்தனை உக்கிரமாக தான் இருந்தும், தன் வெம்மைக்குத் தப்பி இந்தப் பனை மரங்கள் காய்கள் தருவது குறித்து வெயிலுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவர்கள் விளையாடுவதற்காகவாவது இனி, பனை மரங்கள் மீது கூடுதல் உக்கிரம் காட்டுவது இல்லை என வெயில் தீர்மானித்தது. பனங்காய் வண்டிகள்
...more