பின்பொரு நாள் அந்த ஊருக்கு மழை வந்தது. முதிர்ந்த மழை. அந்த மழைக்குப் பல லட்சம் வயது இருக்கும். ஒவ்வொரு முறை மேகத்தில் இருந்து குதிக்கும்போதும், தன் வயதை அது கூட்டிக்கொண்டே வரும். முதல் முறை அது ஒரு மலைக் காட்டில் குதித்தபோது, அதன் தகப்பன் சொன்னது, ‘‘முதல் முறை மண்ணுக்குப் போகிறாய்... மேகமாகித் திரும்பி வா.’’ மலைக் காட்டில் அருவியாகி, ஏதேதோ ஊர்களில் நதியாகிக் கடந்து, கடலில் ஆவியாகி மேகத்தை அடைந்து, மீண்டும் அது ஒரு பெரு நகரத்தில் குதித்தது. ஆடி ஆடி சாக்கடை நீரில் மிதந்து கடலிடம் கலக்கையில், அது தன் வாழ்வின் மிகப் பெரும் அனுபவத்தைத் தன் ஞாபகக் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டது. ஆயிற்று வருடங்கள். பல
...more