நான்தான் உன் பிறவியின் முழு ஒளி உன் அவதார நிமித்தம் உயிரின் கவிதாமணி நீ அறியாது, தொண்டையில் மாட்டிக் கொண்டிருக்கும் உன் கனவின் தூண்டில் முள் தொன்றுதொட்டு உலகின் ஆதிமகன். ஆதி மகளுக்கும் உனக்கும் இன்றுவரை வழிவழி வந்த சொந்தம் வேஷங்கள் இற்று விழுந்ததும் அன்றிலிருந்து இன்று வரை மாறாத மிச்சம் உனக்கு உன் அடையாளம்.