அவர்மீது இன்னொருவர் படுத்துக்கொள்ளவேண்டும். அவர்மீது இன்னொருவர். இப்படி கிட்டத்தட்ட கூரை வரை மனித உடல்கள் படுத்துக்கிடந்தன. பசியிலும் மயக்கத்திலும் பலர் மூச்சைப் பிடித்தபடி இரவு முழுக்கப் படுத்துக் கிடந்தனர். பலர் மயங்கிச் சரிந்துவிட்டனர். விடிந்ததும்தான் தெரிந்தது, அடியில் படுத்துக்கிடந்த நூற்றுக்கணக்கானவர்கள் எப்போதோ இறந்துபோயிருந்தனர்.’