துடைத்து அழிக்கப்பட்ட பலகைபோல் அவர்கள் இப்போது நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் அதிர்ச்சி இல்லை, பயம் இல்லை. அவர்களிடம் நாணம் இல்லை. மானம் பறிபோய்விட்டதே என்னும் கோபத்தையோ ஆற்றாமையையோ அவர்களிடம் காணமுடியவில்லை. வெறுமனே நின்றுகொண்டிருந்தார்கள், அவ்வளவுதான். சிலர் தரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
Patri Raman liked this