பொதுவாக நாம் அதிகம் காணும் பதிவுகள் வதைமுகாம்களின் கொடூரங்களை விவரிப்பவை. இந்த வகைப் பதிவுகளின் தேவையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதே சமயம் இந்தப் பதிவுகள் நம் உணர்வுகளைப் பாதித்தாலும் நம் புரிதலை அதிகரிப்பதில்லை என்கிறார் ஆலன். வதைமுகாம் என்பது அதில் சிக்கியவர்களின் கொடுமையான அனுபவங்கள் மட்டுமேயல்ல. அவை நம்மை உலுக்கியெடுக்கும் அதே சமயம், நம்மை ஒருவகையில் மழுங்கடிக்கவும் செய்கின்றன. ‘ஐயோ! கொடுமை!’ என்பதே நம் அதிகபட்ச உணர்வு வெளிப்பாடாக இருக்கிறது. ஹாலோகாஸ்ட் நம்மை அறிவுபூர்வமாகச் சிந்திக்க வைப்பதில்லை. நம் புரிதலைப் பாதிப்பதில்லை. அதற்கு வதைமுகாம் அனுபவப் பதிவுகளைத் தாண்டி நாம் சென்றாகவேண்டும்
...more