பதிப்பாளர்கள் சொன்னது சரிதான். வீஸெலின் புத்தகம் அவர் எதிர்பார்த்தபடி விற்கவில்லை. 900 பக்கங்களுக்கு எழுதிவைத்தால் இப்படித்தான் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட வீஸெல் மீண்டும் தன் பிரதியில் பணியாற்ற ஆரம்பித்தார். இரக்கமின்றிப் பக்கங்களை வெட்டியெடுத்து, சிறிதாக்கி மீண்டும் வெளியிட்டார். இப்போது நல்ல விமரிசனங்கள் கிடைத்தன, மதிக்கத்தக்க ஆளுமைகளிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன. இருந்தும் விற்கவில்லை.