இவர் பரவாயில்லை, சில சமயம் ஒரு படுக்கையில் மூவர் படுத்துறங்க வேண்டும். இதுவும்கூடப் பரவாயில்லை என்று சொல்லும்படி பல முகாம்களில் சில அடி அகலங்களில் இருக்கும் படுக்கையில் ஏழு பேர் வரை நெருக்கியடித்து உறங்கவேண்டும். ஒருவர் தலை வைத்துப் படுத்துக்கொள்ளும் இடங்களில் பலர் கால்களை நீட்டிக்கொண்டிருப்பார்கள். துர்நாற்றம் வயிற்றைக் கலக்கும். ஆனால், வேறு வழியில்லை. குளிரில் கால்களைச் சுத்தப்படுத்துவது இயலாத காரியம். தவிரவும் அங்கே குளிக்கும் வழக்கம் கொண்டவர்கள் அதிகம் பேர் இல்லை. இதுபோக, காலணிகளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருந்ததால் பலர் காலணிகளை அணிந்தபடியே
...more