எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக் கிடக்கும் முகங்கள் எத்தனையோ. வெளிப்படாமலே அவை புதைந்துபோய் விடுகின்றன.
சந்தர்ப்பங்களில் வெளிவரும் முகங்களையும் சில நேரங்களில் பார்க்க மறுத்துவிடுகிறோம்.