வெட்டம் மாணி அடிப்படையில் மத பக்தி கொண்ட கிறித்தவர். பைபிளில் அவருக்கு ஆழமான ஈடுபாடும் படிப்பும் இருந்தது. இந்து புராணங்களை அவர் இந்திய நாட்டின் கலாசார அடித்தளமாகவே காண்கிறார், மதநூல்களாக அல்ல. ‘எந்த ஒரு பண்பாடும் அது உருவாக்கி எடுத்திருக்கும் புராண இதிகாசங்களின் மீது வேரூன்றியபடித்தான் வளர முடியும். இந்திய இலக்கியமும் அப்படித்தான். மகத்தான மகாபாரதம், ராமாயணம், புராணங்கள், ஸ்மிருதிகள் போன்றவை நம் பண்பாட்டை உருவாக்கும் சக்திகள்’ என்று தன் முன்னுரையில் வெட்டம் மாணி குறிப்பிடுகிறார்.

![முன்சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள் [Munsuvadugal: Sila Vaazhkkai Varalarugal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1484065610l/33831785._SY475_.jpg)