உலகைக் கட்டுப்படுத்திய ஆற்றல்களைத் தாங்கள் கட்டுப்படுத்தியதாக அவர்கள் முழங்கினர். இதில் வேடிக்கை என்னவென்றால், பயனுள்ள ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்த தச்சர்கள், கொத்தனார்கள், விவசாயிகள் போன்ற பெரும்பான்மை மக்கள், கடும் வெயிலில், தங்கள் முகங்களிலிருந்து வியர்வை வழிந்து கொண்டிருக்க, கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, எதையோ உளறிக் கொண்டு, தவளைகளைப்போல கொக்கரித்துக் கொண்டிருந்த இந்தக் கோமாளிகளுக்குக் கீழான நிலையை அடைந்துவிட்டிருந்தனர்.