அவன் என்னையும் மற்றவர்களையும் மிகச் சிறியவர்களாக உணரச் செய்தான். தான் மட்டுமே சிறந்த பண்புநலன்களின் உறைவிடம் என்பதுபோலவும், நாங்களெல்லாம் வேசி மகன்கள் என்பதுபோலவும் அவன் நடந்து கொண்டான். இது, அளவுக்கதிகமாகவே தத்துவப் புத்தகங்களைப் படித்ததால் ஏற்பட்ட இன்னல்போலும். நீங்கள் அவற்றை ஏராளமாகப் படித்தீர்கள் என்றால், உங்களுக்கு உங்கள்மேல் எந்த நம்பிக்கையும் ஏற்படாது.