ஒரு சாதாரண மனிதனின் தத்துவத்தை நான்கே வார்த்தைகளில் தொகுத்துக் கூறிவிடலாம்: எனக்கு அதில் என்ன இருக்கிறது? ஒரு சமதர்மச் சமுதாயத்தை நான் வரவேற்கிறேன். எனக்கு அதிலிருந்து பலன் கிடைக்கும் என்றால், ஒரு பிரம்மாண்டமான அசுர நாகரீகத்தைக்கூட நான் வரவேற்கிறேன். எனக்குத் தேவையெல்லாம் பழிக்குப் பழி, இரண்டு வேளை உணவு, கூடலின்பம் ஆகியவையே. முடிந்தால், மற்றவர்கள் இப்போது எவ்வாறு என்னை வெறுப்போடு நடத்துகிறார்களோ, அதேபோல நான் அவர்களை நடத்துவதற்குத் தேவையான செல்வத்தையும் பதவியையும் அடைவதற்கான ஒரு வாய்ப்பையும் நான் விரும்புவேன்.