ஒவ்வொன்றையும் தொலைக்கும்போது நம் அறிவு ஒவ்வொரு சமாதானம் சொல்கிறது. ‘நான் என்ன சின்னப் பிள்ளையா?’, ‘இதைச் செய்யிற நேரத்துக்கு ஏதாவது உருப்படியா செய்யலாம்’, ‘இதுக்கு நேரம் ஒதுக்குற அளவுக்கு நான் சும்மா இல்லை... நான் ரொம்ப பிஸி’ என ஏதேதோ காரணங்கள். ஆனால், சிலர் மட்டும் அத்தனை நெருக்கடிகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் மத்தியில் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை விட்டுக்கொடுப்பதே இல்லை.

