‘என்னது உன் புள்ள மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்கிறானா?’ என்று வீட்டைக் கூட்டிப் பெருக்க வரும் அம்மாவிடம் கேட்கும் கேள்விக்குப் பின்னால், ‘இவருக்கு ஏது இவ்வளவு காசு?’ என்ற குரூரம் ஒளிந்திருக்கிறது. நலிந்த மனிதர்கள் மீது நம்பிக்கைவைக்கத் தயங்குகிற சமூகம், கோழைத்தனமான சமூகம்.

