சிவபதி இன்னமும் புதிது புதிதாக ஏதோ படிக்கிறான். ஆய்வு மாணவன்போல தேடிக்கொண்டே இருக்கிறான். அவனால் வேலை, குடும்பம் என எல்லாவற்றையும் உற்சாகத்தோடு அணுக முடிகிறது. அவன் திறமையை யாராலும் விலை பேச முடியாது. என்ன விலை வைத்தாலும் அவன் அதைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொள்ளாமல் அவன் தேடலைத் தொடர்கிறான்!

